தமிழ்நாடு
2 ஆண்டுகளுக்கு பின் திருவண்ணாமலையில் அனுமதி: பக்தர்கள் மகிழ்ச்சி!
இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வந்ததால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவண்ணாமலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கிரி வலத்திற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இதனால் ஒவ்வொரு பௌர்ணமியிலும் பக்தர்கள் கிரிவலம் செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து விட்டது என்பதும் தமிழ்நாடு முழுவதும் நேற்று 100க்கும் குறைவான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பங்குனி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கிரிவலம் செல்லலாம் என்றும் பக்தர்களுக்கு முழு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.