தமிழ்நாடு
அரக்கோணம் ரயில்வே பணிமனையில் தீ விபத்து!
சென்னை: அரக்கோணம் ரயில்வே பணிமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில்வே பணிமனை மிகவும் பரபரப்பாக இயங்க கூடிய பணிமனை ஆகும். இங்கு 500க்கும் அதிகமான பணியாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று மதியம் அரக்கோணம் ரயில்வே பணிமனையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தால் பணிமனையில் கடும் புகை ஏற்பட்டுள்ளது.
பணி மனையின் மையப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை.சேதங்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.