Connect with us

தமிழ்நாடு

பாஜகவில் இணைகிறாரா சைதை துரைசாமி? அவரே அளித்த விளக்கம்!

Published

on

பாஜகவில் சைதை துரைசாமி இணைய போவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை நந்தனம் புத்தக கண்காட்சியில் மோடி குறித்த புத்தகத்தை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிடவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சைதை துரைசாமி கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது

கடந்த சில ஆண்டுகளாக அதிமுக முக்கிய விழாக்களில் கூட கலந்து கொள்ளாத சைதை துரைசாமி, பாஜகவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதால் அவர் பாஜகவில் இணைவாரா என்ற வதந்தி ஏற்பட்டது. ஆனால் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சைதை துரைசாமி கூறியிருப்பதாவது:

நான் ஒரு கல்வியாளராக பல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். இலவச ஐஏஎஸ் அகடமி நடத்துவதால் பல கட்சியினரும் பல நிகழ்ச்சிகளிலும் என்னை அழைத்து சிறப்பு விருந்தினராக பேச வைத்திருக்கிறார்கள். அதேபோன்றுதான் தற்போது பாஜக நடத்தும் நிகழ்ச்சியிலும் கல்வியாளராக மட்டுமே பங்கேற்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? ஏன் அரசியல் சாயம் பூசுகிறீர்கள்? ஏன் இப்படி என்னை பற்றிய சர்ச்சைகளை கிளப்புகிறார்கள்?! நேற்றும் இன்றும் என்றும் என்றென்றும் எம்ஜிஆரின் தொண்டனாகவே இருந்து வருகிறேன் இருப்பேன்; இதில் எந்த மாற்றமும் இல்லை.

நான் நினைத்திருந்தால் எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் சென்றிருக்கலாம். குறிப்பாக திமுகவுக்கு சென்றிருக்கலாம் சிவப்புக் கம்பள வரவேற்பு எனக்கு அப்போதே கொடுக்கப்பட்டது. எந்தக் காலகட்டத்திலும் பணத்திற்காக கட்சி மாறும் நிலைப்பாட்டை எடுத்தது இல்லை. நான் ஒரு கொள்கையோடு பயணித்துக் கொண்டிருப்பவன். நான் நினைத்திருந்தால் எத்தனையோ வழிகளில் எப்படி எப்படியோ சம்பாதித்து இருக்கலாம் ஆனால் அதற்கான ஆள் நானில்லை.

இனி வரும் காலங்களிலும் அரசியலுக்கு அப்பாற்பட்டு கல்வியாளராக நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன். வீணாக என்னைப் பற்றிய வதந்திகளை பரப்ப வேண்டாம் நான் யாருக்கும் எதற்கும் பயந்தவன் அல்ல நேர்மையோடு ஒழுக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பவன் என்பது என்னை சார்ந்தவர்களுக்கு நன்கு தெரியும்” இவ்வாறு சைதை துரைசாமி வதந்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

 

இந்தியா3 மணி நேரங்கள் ago

வேட்டி கட்டிய விவசாயிக்கு மால் அனுமதி மறுப்பு: ஒரு வார காலத்திற்கு மால் மூட உத்தரவு!

உலகம்3 மணி நேரங்கள் ago

உலகின் முதல் 10 பணக்கார நகரங்கள்: இந்தியாவில் எதுவும் இல்லை!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளி விரதம்: அம்மனின் அருள் பெறும் வழிபாட்டு முறைகள்

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ஆடி மாத தேங்காய் சுடும் பண்டிகை: வரலாறு, காரணங்கள் மற்றும் முக்கியத்துவம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

மூளையை உண்ணும் அமீபா: கேரளாவில் இளைஞர் பலி! அறிகுறிகள் என்ன? தடுப்பு நடவடிக்கை என்னென்ன?

ஜோதிடம்4 மணி நேரங்கள் ago

சூரிய பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு பணம், பதவி யோகம்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

காலையில் ஒரு சிட்டிகை உப்பு: அற்புதமான நன்மைகள்!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

செட்டிநாடு கார சட்னி செய்வது எப்படி?

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

சிறுநீரகத்தை சுத்தம் செய்யும் 5 அற்புத பழங்கள்! தவறாமல் சாப்பிடுங்கள்!

ஜோதிடம்5 மணி நேரங்கள் ago

எண் கணிதம் படி எந்த தேதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி வெள்ளியின் சிறப்புக்கள் மற்றும் நன்மைகள்!

வணிகம்4 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!