இந்தியா
என் மரணத்திற்காக அரசியல் எதிரிகள் பிரார்த்தனை: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி!
எனது மரணத்திற்காக அரசியல் எதிரிகள் பிரார்த்தனை செய்வதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஏழாவது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நேற்று பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி உள்பட பல பகுதிகளில் உரையாற்றினார்.
அப்போது அவர், ‘நான் யாரைப் பற்றியும் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை சொல்ல விரும்பவில்லை என்றும் ஆனால் எனது மரணத்திற்காக எனது அரசியல் எதிரிகள் காசியில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள் என்றும் ஆனால் அதுபற்றி நான் கவலைப்படவில்லை என்றும் இறக்கும்வரை காசியை விட்டு நானும், என்னை விட்டு காசியும் பிரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உக்ரைனில் சிக்கி உள்ள நூற்றுக்கணக்கான இந்திய மாணவர்களை பாதுகாப்பாக திருப்பி அழைத்து வந்துள்ளோம் என்றும் இந்தியாவை பலப்படுத்துவதற்கான நேரமிது என்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம் கமிஷனில் வாழும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தினர் இந்தியாவை தன்னிறைவு அடையச் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.