உலகம்
2 முக்கிய நகரங்களை கைப்பற்றியது ரஷ்யா: உக்ரைனில் பெரும் பதற்றநிலை!
உக்ரைன் நாட்டின் இரண்டு முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ள நிலையில் உக்ரைனில் பெரும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யாவின் தாக்குதல் கொடூரமாக இருப்பதை அடுத்து அவரை நாட்டின் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர்
மேலும் உக்ரைன் நகரங்களை நோக்கி ரஷ்ய ராணுவம் முன்னேறி வருவதாகவும், ஏற்கனவே விமான தளம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உள்ள நோவா ககோவ்கா உள்பட 2 முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் நோவா ககோவ்கா நகரில் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
மேலும் தலைநகர் கீவ் நகரத்தை நோக்கியும் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதால் வெகு சீக்கிரம் இந்த போர் முடிவடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அமெரிக்கா உள்பட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவுவதாக அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வரும் நிலையில் எந்த ஒரு ராணுவ உதவியும் இதுவரை உக்ரைனுக்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது