தமிழ்நாடு
0, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு: அமைச்சர் அன்பில் மகேஷ்
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு நடத்தப்படவில்லை என்பதும் இதனை அடுத்து அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே .
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப் படியாக குறைந்துள்ள நிலையில் இந்த ஆண்டு பொதுத் தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்திருந்தது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் 10ம் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறித்து இன்று மாலை அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து 10 12ஆம் வகுப்பு மாணவர்கள் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.