சினிமா செய்திகள்
நீ படம் எடுத்தியான்னு எனக்கு சந்தேகம் வந்துள்ளது: ஆர்.கே.செல்வமணி குறித்து கே.பாக்யராஜ்!
பிரபல இயக்குனர் ஆர் கே செல்வமணி ’கேப்டன் பிரபாகரன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி உள்ள நிலையில் அந்த படங்களை எல்லாம் நீதான் இயக்கினாயா என்று எனக்கு சந்தேகமாக உள்ளது என கே பாக்யராஜ் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இயக்குநர் சங்கத் தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் கே பாக்யராஜ் தலைமையிலான அணியும் ஆர்கே செல்வமணி தலைமையிலான அணியும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில் இயக்குநர் கே பாக்யராஜ் தனது அணியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசியபோது, ‘நான் வெற்றி பெற்று விடுவேன் என்ற பயம் ஆர்கே செல்வமணி வந்து விட்டதாக கூறினார்.
மேலும் அவர் பல வெற்றி படங்களை ஆர்கே செல்வமணி எடுத்ததாக கூறுகின்றனர். ஆனால் அந்த படங்கள் எல்லாம் அவர்தான் எடுத்தாரா என்ற சந்தேகம் எனக்கு வந்து விட்டது என்று கூறினார். மேலும் இப்போதுள்ள இயக்குனர் சங்க நிர்வாகிகளை தொலைபேசியில் கூட அணுக அணுக முடியவில்லை என்றும் ஆனால் நீண்ட நாட்களாக நான் ஒரே தொலைபேசி எண்ணை தான் வைத்துள்ளேன் என்றும் நான் வெற்றி பெற்றால் என்னை அனைவரும் எளிதாக அணுகி பிரச்சனைகளை கூறலாம் என்றும் கூறினார்.
மேலும் இயக்குனர் சங்கத்திற்கு என பிரத்யேக யூடியூப் சேனல் தொடங்கப்படும் என்றும் திரைப்படத்தின் தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பாக அனைவருக்கும் ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் புதுமுக இயக்குனர் கதையை தயாரிக்க இயக்குனர் சங்கம் சார்பில் முன்னெடுத்து செல்வோம் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.