சினிமா செய்திகள்
இளையராஜா பாடல்களை எக்கோ நிறுவனம் பயன்படுத்த தடை: நீதிமன்றம் உத்தரவு
இசைஞானி இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்த தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தனது பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் காப்புரிமை பெறாமல் பயன்படுத்தி வருவதாக இசைஞானி இளையராஜா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வழக்கு பதிவு செய்து இருந்தார்
இந்த வழக்கு விசாரித்த தனி நீதிபதி, இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தீர்ப்பளித்து இருந்தார்.
இந்த தீர்ப்புக்கு தடை உத்தரவு கேட்டு இளையராஜா தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்த நிலையில் இளையராஜாவின் பாடல்களை எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் பயன்படுத்த உரிமை உள்ளது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்துள்ளது.
காப்புரிமை பெறாமல் பாடல்களை எக்கோ உள்ளிட்ட நிறுவனங்கள் பயன்படுத்த முடியாது என்ற இளையராஜாவின் வாதத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.