தமிழ்நாடு
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை.. ஆய்வு மையம் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மூன்று மாநிலங்களிலும் இன்றில் இருந்து அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்யும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிக அதிக அளவில் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் வால்பாறை, தேனி, கன்னியாகுமரி, நீலகிரி, நெல்லையில் ஆகிய மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்யும். அதேபோல் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும்.
இதனால் காவேரியில் அதிக வெள்ளபெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கனவே காவிரியில் வெள்ளம் அதிகம் ஆகியுள்ளது.