செய்திகள்
வருகிற 19ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு அறிவிப்பு…
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே தேர்தல் பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தலை முன்னிட்டு 19ம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவவே, தேர்தலுக்கு முந்தைய நாள் அதாவது பிப்ரவரி 18ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், 50 சதவீத ஆசிரியர்கள் உள்ளாட்சி தேர்தல் பணிக்கு செல்வதால் 18ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.