கிரிக்கெட்
தீபக் சஹாரை விட்டு கொடுக்காமல் ஏலம் எடுத்த சிஎஸ்கே: எத்தனை கோடி தெரியுமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான தீபக் சஹரை விட்டுக்கொடுக்காமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் இன்று மதியம் முதல் நடைபெற்று வரும் நிலையில் இந்த ஏலத்தில் இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ராபின் உத்தப்பா, பிராவோ, அம்பத்தி ராயுடு, ஆகியோர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர். ஏற்கனவே தோனி, ஜடேஜா, ருத்ராஜ் மற்றும் மொயின் அலி ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தீபக் சஹர் ஏலத்திற்கு வந்தபோது அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, டெல்லி கேப்பிடல் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி போட்டி போட்டன. இந்த நிலையில் திடீரென 11 கோடியில் ஏலம் கேட்க வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முக்கிய வீரரை விட்டுக்கொடுக்காமல் 14 கோடிக்கு ஏலம் எடுத்தது.
அதேபோல் தமிழகத்தை சேர்ந்த நடராஜனை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விட்டுக்கொடுக்காமல் 4 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது