தமிழ்நாடு
ஊரடங்கு முழுவதுமாக ரத்தா? பிப்ரவரி 14ல் முதல்வர் ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 30 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு தற்போது 3 ஆயிரமாக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் மற்றும் அதிகப்படியான கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிப்ரவரி 14ஆம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முழுவதுமாக நீக்கலாம் என தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
குறிப்பாக திரை அரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. பிப்ரவரி 14ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மருத்துவ வல்லுனர்கள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்து பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் படுத்துவார் அல்லது முழுவதுமாக ஊரடங்கு நீக்கும் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.