சினிமா செய்திகள்
முதல்வர் முன் கூனிக்குறுகி நின்றாரா சூப்பர் ஸ்டார் நடிகர்?
முதலமைச்சர் முன் சூப்பர் ஸ்டார் நடிகர் ஒருவர் கூனிக்குறுகி நின்றதாக வெளிவந்திருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சமீபத்தில் பிரபல தெலுங்கு நடிகர்கள் சந்தித்தனர். பிரபாஸ், சிரஞ்சீவி, எஸ்எஸ் ராஜமவுலி, மகேஷ் பாபு உள்ளிட்டோர் தனி விமானத்தில் முதல்வரை சந்திக்க கிளம்பிய புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியை சந்திக்கும்போது நடிகர் சிரஞ்சீவி கூனிக்குறுகி கையெடுத்துக் கும்பிட்டபடி இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2008ஆம் ஆண்டு ஆந்திர அரசியலில் குதித்து சிரஞ்சீவி முதல்வராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில தொகுதிகளில் மட்டுமே அவரது கட்சி வெற்றி பெற்றதையடுத்து அரசியலில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் தற்போது தீவிரமாக சினிமாவில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சினிமா உலகப் பிரச்சனையை தீர்த்துவைக்க முதல் வரை சந்தித்தார். அப்போது அவர் முதல்வரை கையெடுத்து கும்பிட்டு கூனிக்குறுகி நின்றதாக தெரிகிறது.
தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவர் முன் நிற்கவே பிரபல நடிகர்கள் அச்சப்பட்டார்கள் என்று கூறப்பட்ட நிலையில் தான் தற்போது சிரஞ்சீவி இருந்தார் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.