இந்தியா
அனைவருக்கும் மூன்றாவது தடுப்பூசி: மத்திய அரசு திட்டம்!
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அனைவருக்கும் முதலாவது மற்றும் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அனைவருக்கும் மூன்றாவது டோஸ் செலுத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி மூன்றாவது டோஸ் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாகவும் ஆனால் விஞ்ஞான பூர்வமான தேவையை அனுசரித்து மூன்றாவது டோஸ் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதி ஆயோக்கின் சுகாதார பிரிவு உறுப்பினர் டாக்டர் வி கே பால் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘முதல் மற்றும் இரண்டாவது டோஸ் இந்தியா முழுவதும் செலுத்தப்பட்டு வருவதாகவும் ஆனால் அதே நேரத்தில் விஞ்ஞானபூர்வமான தேவையை அனுசரித்து மூன்றாவது டோஸ் செலுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும் உலக அளவில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து கண்காணித்து வருவதாகவும் மூன்றாவது டோஸ் தேவைப்பட்டால் அனைவருக்கும் செலுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே மூன்றாவது டோஸ் செலுத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளி வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.