இந்தியா
விவசாயிகளை கார் ஏற்றி கொல்ல முயற்சி: அமைச்சர் மகனுக்கு ஜாமின்!
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகளை காரை ஏற்றி கொல்ல முயற்சித்த வழக்கில் மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் என்ற பகுதியில் விவசாயிகள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் கூட்டத்தில் திடீரென கார் ஒன்று புகுந்ததில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர் .
இது குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார். இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில் மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து அந்த ஜாமீன் மனுவுக்கு அனுமதி வழங்கியது அலகாபாத் உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
விவசாயிகளை கொலை செய்ய காரை ஏற்றி கொல்ல முயற்சித்த வழக்கில் மத்திய அமைச்சரின் மகனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.