இந்தியா
ஹிஜாப் வழக்கில் ஐகோர்ட் நீதிபதி முக்கிய உத்தரவு: பெரும் பரபரப்பு!
![hijaab - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/02/hijaab.webp)
கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிவது குறித்த வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் சிலர் திடீரென ஹிஜாப் அணிந்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு போட்டியாக இந்து மாணவர்கள் காவி உடை அணிந்தும் தலித் மாணவர்கள் நீல நிற உடை அணிந்து வந்ததால் பெரும் பிரச்சனை ஏற்பட்டது.
இது குறித்து உலக தலைவர்களும் கருத்து தெரிவிக்க ஆரம்பித்தனர் என்பது மக்களவையிலும் எம்பிக்கள் மத்திய அரசை கேள்வி எழுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஹிஜாப் அணிவது குறித்த வழக்கு கடந்த சில நாட்களாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கில் இன்று நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி, ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை உயர்நீதிமன்றத்தின் விரிவான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.