தமிழ்நாடு
முதுநிலை நீட் தேர்வு திடீர் ஒத்திவைப்பு: என்ன காரணம்?
முதுநிலை நீட் தேர்வு திடீரென 8 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட்தேர்வு சமீபத்தில் நடந்து முடிந்தது என்பதும், தற்போது மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு வரும் மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் திடீரென இந்த தேர்வு 8 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதன் காரணமாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வின் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.