இந்தியா
அழகியின் குளிக்கும் வீடியோ: பாஜக அமைச்சரை சிக்க வைக்க சதிவலை!
மாடல் அழகி ஒருவரின் குளிக்கும் வீடியோவை எடுத்து பாஜக அமைச்சரை சதி வலையில் சிக்க வைக்க முயற்சி செய்த காதல் ஜோடி கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தீபாலி மற்றும் அக்சத் ஆகிய காதல் ஜோடி பிரபலங்களை அழகிகளை வைத்து மயக்கி பணம் பறிப்பது மற்றும் தேவையான காரியங்களை சாதித்து கொண்டிருக்கும் சதியை செய்துகொண்டிருந்தனர்.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாநில வருவாய் துறை அமைச்சர் ராம் லால் ஜாட்சு என்பவரை தங்களது வலையில் சிக்க வைப்பதற்காக மாடல் அழகி ஒருவரின் குளிக்கும் வீடியோவை எடுத்து அவரை மிரட்டி பத்திரிகையாளர் போல அமைச்சரின் அறைக்குள் அனுப்பி உள்ளனர் .
அமைச்சர் அந்த அழகியை பார்த்து என்ன வேண்டும் என்று கேட்டபோது தனக்கு ஒரு உதவி வேண்டும் என்று கேட்டு ஒரு டாக்குமென்டை கொடுத்து உள்ளார். அந்த டாக்குமெண்ட் தன்னுடைய துறைக்கு சம்பந்தப்பட்டது இல்லை என்று கூறியதை அடுத்து அவரை வெளியே போகச் சொல்லியுள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் மீண்டும் அமைச்சரை சந்திக்க வேண்டும் என அந்த காதல் ஜோடி மாடல் அழகியை மிரட்டியதால் அந்த மாடல் அழகி ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை செய்தபோது முழு உண்மையும் வெளியே வந்தது. பாஜக அமைச்சரை சிக்க வைப்பதற்காக தான் மாடல் அழகி மிரட்டப்பட்டார் என்றும் இதனால் தான் அவர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டார் என்றும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து காதல் ஜோடி தீபாலி மற்றும் அக்சத் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அமைச்சர் அதிர்ச்சி அடைந்து நான் மிகவும் அதிர்ஷ்டசாலி, நல்லவேளை சதி வலையில் சிக்காமல் தப்பிவிட்டேன் என்று கூறியுள்ளார்.