உலகம்
குடும்பத்துடன் தலைமறைவாக இருக்கும் கனடா பிரதமருக்கு கொரோனா தொற்று!
குடும்பத்துடன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் கனடா பிரதமருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
அமெரிக்காவில் இருந்து வரும் லாரி மற்றும் டிரக் டிரைவர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற உத்தரவை சமீபத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி டிரைவர்கள் பிரம்மாண்டமான பேரணி ஒன்றை ஒட்டாவா நகரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இதனால் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் தலைமறைவானார் என்று கூறப்பட்டது.
இருப்பினும் அவர் ஆன்லைன் மூலம் தனது பிரதமர் பணியை கவனித்து வருவதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறின என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் கனடா பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இதனை அடுத்து அவர் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
மேலும் கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி ஆன்லைன் வழியாக தனது பணியை தொடர இருப்பதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.