தமிழ்நாடு
அச்சப்படாமல் பள்ளிக்கு வாருங்கள்: மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு!
மாணவ மாணவிகள் அச்சப்படாமல் பள்ளிக்கு வாருங்கள் என்றும் உங்களுக்கு பாதுகாப்பு அளிப்பது தமிழக அரசின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
40 நாட்களுக்கு பின்னர் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் இன்று காலையிலேயே பள்ளிகளுக்கு செல்ல மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மாணவ மாணவிகள் அச்சப்படாமல் பள்ளிக்கு வரவேண்டும் என்றும் மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமை என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பல கட்டங்களாக ஆலோசனை நடத்திய பின்னரே பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
இந்த நிலையில் இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து மாணவர்களை வரவேற்க ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பள்ளியின் வாசலில் தயாராக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அனைத்து மாணவ மாணவிகளும் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்றும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கூட்டம் கூடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதை அடுத்து இன்று முதல் ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.