சினிமா செய்திகள்
‘ஆர்.ஆர்.ஆர்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்!
பிரமாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீசாக இருந்த நிலையில் திடீரென ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது என்பது தெரிந்ததே.
தமிழகம் உள்பட பல மாநிலங்களில் திரையரங்குகளில் 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள் என்பதும் உலகின் பல நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பெரிய படங்களின் ரிலீஸ் செய்திகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் எஸ்எஸ் ராஜமவுலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரிலீஸ் செய்து உடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் இருக்கு மார்ச் 25ஆம் தேதி வெளியாகும் என இன்று காலை அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது அதே தேதியில் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வெளியாக இருப்பதால் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும் தமிழகத்தில் ‘டான்’ திரைப்படம் திட்டமிட்டபடி ரிலீஸாகும் என்றும் இந்த திரைப்படத்திற்கு தேவையான திரையரங்குகளுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் ரிலீஸ் தேதியில் இருந்து பின்வாங்காது என்று படக்குழுவினர்களின் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.