செய்திகள்
அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்…மதுரை நீதிமன்றம் உத்தரவு….
அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டியில் உள்ள ஒரு தனியார் கிறிஸ்துவ பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் டூ படித்து வந்தார். திடீரென அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் படித்த பள்ளியை சேர்ந்தவர்கள் அவரை கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட சொல்லி வற்புறுத்தியதாகவும் அதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் பாஜக தரப்பில் கூறி அது தொடர்பான ஒரு வீடியோவையும் வெளியிட்டது. இது தொடரபாக நீதி கேட்டு பாஜக போராட்டமும் நடத்தியது.
ஆனால், பள்ளிக்கல்வித்துறை மறும் காவல்துறை தரப்பில் நடத்திய விசாரனையில் மத மாற்றம் தொடர்பான எந்த பிரச்சனையும் லாவண்யாவுக்கு இல்லை என தெரிய வந்தது. பாஜகவின் கருத்து மாணவியின் பெற்றோர்களே ஏற்கவில்லை. மேலும், சிறுமியின் கிராமத்தில் வசிக்கும் ஊர்கார மக்களும் ஏற்கவில்லை. மேலும், மத மாற சொல்லி கட்டாயப்படுத்தியதால்தான் சிறுமி தற்கொலை செய்தார் எனக்கூறுமாறு சிலர் தங்களை மிரட்டுவதாக அந்த ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஆனால், திடீரென வெளியான ஒரு வீடியோவில் மாணவி லாவண்யாவின் தற்கொலைக்கு மதமாற்றம் காரணமல்ல என்றும் சகாயமேரி என்பவர் வேலை வாங்கியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பதாகவும் சிறுமி கூறியதாக செய்தி வெளியானது.இந்த குழப்பம் நீடித்து வரும் நிலையில், தன் மகளின் மரணத்தை சிபிசிஐடி போலீஸ் விசாரிக்க வேண்டும் என சிறுமியின் தந்தை நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை தற்போது உத்தரவிட்டுள்ளது.