தமிழ்நாடு
அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மழை!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கடந்த சில நாட்களாக மழை குறைந்து, பனி அதிகரித்து வருகிறது என்பதும் இந்த நிலையில் ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சென்னை உள்பட 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என்றும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் நாளை ஜனவரி 30 ஆம் தேதி மற்றும் ஜனவரி 31 பிப்ரவரி 1,2 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலையே காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும் நகரின் ஒரு சில படங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்பதால் மீனவர்கள் மீன் பிடிப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது