தமிழ்நாடு
புறநகர் ரயிலில் பயணம் செய்ய தடுப்பூசி கட்டாயமா? ரயில்வே துறை முக்கிய அறிவிப்பு!
சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பு ஊசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெற்கு ரயில்வே அறிவித்துள்ள நிலையில் தற்போது அது குறித்த முக்கிய அறிவிப்பை மீண்டும் ரயில்வே துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் அதில் ஒன்று புறநகர் ரயில் பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்கள் புறநகர் ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருவதை அடுத்து ரயில்வே துறை இதில் சிறு மாற்றம் செய்துள்ளது.
இதன்படி சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்பவர்கள் இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை என்றும் அறிவித்துள்ளது. இதனால் ரயில் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஆனால் அதே நேரத்தில் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்பவர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.