தமிழ்நாடு
திருவொற்றியூர் திமுக எம்.எல்.ஏ திடீர் நீக்கம்: துரைமுருகன் அதிரடி நடவடிக்கை!
திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கட்சிப் பொறுப்பில் இருந்து திடீரென நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் பொறுப்பில் இருந்து வந்த திருவொற்றியூர் எம்எல்ஏ கேபி சங்கர் அவர்கள் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் அறிவித்துள்ளார்.
கட்சி கட்டுப்பாட்டை திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ கேபிள் சங்கர் அவர்கள் மீறி வருவதால் அவர் பொறுப்பில் இருந்த மேற்கு பகுதி திமுக செயலாளர் பதவி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் திமுக எம்எல்ஏ திடீரென கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் எதற்காக நீக்கப்பட்டார் என்பது குறித்த முழு தகவலையும் திமுக தலைமை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.