தமிழ்நாடு
நயினார் நாகேந்திரனின் சர்ச்சை பேச்சு: ஈபிஎஸ் இடம் வருத்தம் தெரிவித்த அண்ணாமலை!
அதிமுக குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நயினார் நாகேந்திரன் பேசிய நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட நயினார் நாகேந்திரன் பேசியபோது சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஆண்மை இன்றி இருக்கிறார்கள் என்றும் பாஜகதான் எதிர்க்கட்சி போல் செயல்பட்டு வருகிறது என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழகத்தில் வீறுநடை போடுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுக குறித்து சர்ச்சைக்குரிய பேசிய நயினார் நாகேந்திரனுக்கு கடும் கண்டனங்கள் குவிந்து என்பதும் சென்னை போலீசில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் நயினார் நாகேந்திரன் கருத்து பாஜகவின் கருத்து இல்லை என்றும் அவரது கருத்து குறித்து எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன் என்று கூறியுள்ளார்.
மேலும் பல இக்கட்டான சூழ்நிலையில் பாஜகவிற்கு அதிமுக துணை நின்று உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.