Connect with us

தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனின் ‘ஆண்மை’ சர்ச்சை பேச்சு: சென்னை போலீசில் புகார்!

Published

on

நேற்று நடைபெற்ற பாஜக தலைவர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அதிமுகவில் உள்ளவர்கள் ஆண்மை இன்றி இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பாஜக பிரபலம் நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது அதிமுகவினர் சென்னை காவல் துறையில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் நேற்று தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து பாஜக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினர். இதில் பாஜக தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரன் பேசியபோது, ‘சட்டமன்றத்தில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய ஒருவர்கூட அ.தி.மு.க.வில் இல்லை. அ.தி.மு.க. மக்கள் பிரச்சினைகளை எப்போதும் சட்டமன்றத்தில் பேசுவதில்லை. எதிர்க்கட்சியாக இல்லாவிட்டாலும் பா.ஜ.க.வின் அண்ணாமலை துணிச்சலோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

நயினாரின் இந்த பேச்சுக்கு ஏற்கனவே அதிமுக பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சென்னை கொளத்தூர் காவல்நிலையத்தில் நயினார் நாகேந்திரன் மீது அதிமுக புகார் அளித்துள்ளது.

அதிமுக உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் அளித்துள்ள இந்த புகாரில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து அவதூறாக பேசிய எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் மீது சென்னை காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் தனது பேச்சு குறித்து டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். வள்ளுவர் கோட்டத்தின் போராட்டத்தின்போது ஆயி அதிமுக பற்றி என்னுடைய கருத்துக்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது என்றும் நான் கூறிய கருத்துக்கு எந்தவிதமான உள்நோக்கமும் இல்லை என்றும் போராட்டத்தின் மூலம் நீதி கிடைக்க வேண்டும் என்பதே எங்களது ஒரே எண்ணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

author avatar
seithichurul
தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்23 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்24 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்24 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!