உலகம்
அடிச்சு தூக்கு.. தமிழகத்தில் மெகா கூட்டணிக்கு அடிபோடும் பாஜக.. மாஸ்டர் பிளான்!
சென்னை: பாஜக கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகத்தில் பெரிய கூட்டணி வைக்க முயன்று வருவதாக தகவல்கள் வருகிறது.
2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே இருக்கிறது. ஏப்ரல் இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் வரலாம் என்று இப்போதே தகவல்கள் வருகிறது.
இதற்கு முதற்கட்டமாக பாஜக இப்போதே, பீகார் கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட்டுவிட்டது. மற்ற மாநிலங்களிலும் கூட்டணி வைப்பது குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது.
பாஜகவிற்கு எப்போதும் தென் மாநிலங்கள்தான் சவாலான விஷயம். முக்கியமாக தமிழகத்தில் பாஜக எப்படி இடம் பிடிப்பது என்று பெரிய ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த முறை தமிழகத்தில் பாஜக பெரிய கூட்டணி அமைத்து லோக் சபா தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வருகிறது. இதற்கான ஆலோசனைகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்றும் கூறுகிறார்கள்.