சினிமா செய்திகள்
தனுஷ், ஐஸ்வர்யா ஒரே ஓட்டலில் தங்கியுள்ளார்களா? பரபரப்பு தகவல்!
18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமீபத்தில் அறிவித்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஐதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா, பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ் ஆகியோர் கடந்த 2004ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் திடீரென திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாக சமூகவலைதளங்கள் மூலம் அறிவித்தனர்.
இந்த அறிவிப்பு ரஜினி, தனுஷ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தற்போது ஹைதராபாத்தில் இருப்பதாகவும் அவர்களிடையே பெரும் கணவன் மனைவி சண்டை மட்டும் தான் என்றும் சென்னை திரும்பியதும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் இணைக்க முயற்சி செய்வேன் என்றும் தனுஷின் தந்தை ராஜா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் ஒரே ஓட்டலில் தங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘3’ மற்றும் ’வை ராஜா வை’ படங்களுக்கு பின்னர் அடுத்த படத்தை இயக்க முடிவு செய்திருக்கும் ஐஸ்வர்யா அந்த படத்திற்கான பணிகளை கவனிக்க ஐதராபாத் சென்றுள்ளதாகவும் அதேபோல் ’வாத்தி’ படத்தின் படப்பிடிப்புக்காக சென்றிருக்கும் ஐதராபாத் ஐதராபாத்தில் தங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அது மட்டுமின்றி இருவரும் ஒரே ஓட்டலில் தங்கி இருப்பதாகவும் கூறப்படுவதால் இருவரும் சந்தித்தார்களா/. பேச்சுவார்த்தை நடத்தினார்களா? என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.