கிரிக்கெட்
ஐ.பி.எல் 2020 போட்டி எப்போது தொடங்குகிறது? – பிசிசிஐ செயலாளர் தகவல்
உலகம் முழுவதும் கொரோனா 3 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதிலும், கொரோனாவோடு சேர்த்து ஓமிக்ரான் எனும் புதிய வைரஸும் பரவி வருகிறது. எனவே, பல நாடுகளிலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்தியாவிலும் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் பரவி வருகிறது.
ஒருபக்கம், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் மார்ச் கடைசி வாரத்தில் துவங்கி மே இறுதி வரை நடைபெறும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். பெரும்பாலான அணி உரிமையாளர்கல் போட்டியை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளனர் எனவும், பிப்ரவரி 12,13 தேதிகளில் ஐ.பி.எல். ஏலம் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.