தமிழ்நாடு
மாணவியின் உடலை பெற வேண்டும்: பெற்றோருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
தஞ்சை அருகே அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் மதம் மாறச் சொல்லி வற்புறுத்தியதாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த மாணவியின் வீடியோவும் வைரல் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தங்களது மகளின் மரணத்திற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றால் அவருடைய உடலை பெற மாட்டோம் என மாணவியின் பெற்றோர்கள் கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இது குறித்த வழக்கு ஒன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணை செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்துகொண்ட தஞ்சை பள்ளி மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
மேலும் மாணவிக்கு பாலியல் தொல்லை புகார் எதுவும் இல்லாததால் அவரது உடலை மறுபடியும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும் மாணவியின் பெற்றோர் நாளை தஞ்சை நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜராகவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.