உலகம்
வாட்ஸ்-அப்பில் சர்ச்சை போஸ்ட்: இளம்பெண்ணுக்கு மரண தண்டனை கொடுத்த நீதிமன்றம்!
வாட்ஸ் அப்பில் சர்சைக்குரிய பதிவு செய்த பெண் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அனீகா அதீக் என்பவர் வாட்ஸ் அப்பில் இஸ்லாமியர்களின் கேலி சித்திரங்களை அனுப்பியதாகவும் வாட்ஸ் அப்பில் புனிதர்கள் குறித்து அவதூறாக கருத்துக்களை வெளியிட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டார்.
இதுகுறித்து அவர் மீது வழக்குப் பதிவு செய்த நிலையில் அனீகா அதீக் தன் மீதான குற்றங்களை மறுத்தார். புகார்தாரர் தன்னுடன் நட்பு கொள்ள கூறியதாகவும் நான் மறுத்ததால் என்னை மத விவாதத்துக்கு இழுத்துச் சென்று பொய்யான ஆதாரங்களை திரட்டி தன்னை வேண்டுமென்றே பழி வாங்குவதாகவும் கூறினார்.
இருப்பினும் நீதிமன்றம் அவரது விளக்கத்தை ஏற்று கொள்ளாமல் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கி அதன் பிறகு அவரை தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அனீகா அதீக் வழக்கறிஞர் கூறிய போது இந்தப் பிரச்சினை மிகவும் உணர்ச்சிகரமானது என்பதால் தீர்ப்பு குறித்து என்னால் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
வாட்ஸ் அப்பில் அவதூறாக கருத்து தெரிவித்த இளம்பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பாகிஸ்தான் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.