தமிழ்நாடு
இன்று ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி: தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள்
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன என்பதும் முதல் மற்றும் இரண்டாவது டோஸ் ஆகியவை இந்த சிறப்பு முகாம்களில் செலுத்தப்பட்டு வருகிறது என்பதும் இதுவரை தமிழகத்தில் கோடிக்கணக்கானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு இருப்பதை அடுத்து இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் சமீபத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் செலுத்துவதற்கு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டது போல் இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் மொத்தம் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசிக்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் சென்னையில் மட்டும் 160 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
60 வயதுக்கு மேற்பட்ட 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் ஆகியோர் இந்த பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.