Connect with us

இந்தியா

நியாயமாக நீங்கள் பாராட்டியிருக்க வேண்டும்: ஊர்திகள் சர்ச்சை குறித்து முதல்வருக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில்!

Published

on

குடியரசு தின அணிவகுப்பில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு நியாயமாக நீங்கள் பாராட்டி இருக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திற்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

குடியரசு தினத்தில் தமிழக ஊர்திகள் இடம் பெறாதது குறித்து பெரும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த கடிதத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பதில் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் ’குடியரசு தின அணிவகுப்பில் இடம்பெறக்கூடிய அலங்கார ஊர்திகளை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் எந்தெந்த மாநிலங்கள் சார்பில் எந்தெந்த அமைச்சகங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம்பெற வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டதாகவும், இந்த அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பிலும் வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து பரிசீலனை செய்யப்பட்டதாகவும் ஆனால் தமிழக அரசின் கோரிக்கை குழுவினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.

தமிழகம் மட்டுமல்ல 29 மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெற கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 12 அலங்கார ஊர்திகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாகவும், அலங்கார ஊர்தி குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் பதிலளித்துள்ளார். தமிழக அலங்கார ஊர்திகள் கடந்த 2017, 2019,2020, 2021 ஆகிய ஆண்டுகளிலும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பரிந்துரைக்கப்பட்ட விதிகளின் அடிப்படையில் தான் குடியரசு தின விழா ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டதாகவும் நியாயமாக இதனை நீங்கள் பாராட்ட வேண்டும் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மேலும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் ஊர்திகள் குறித்து நிபுணர் குழு தான் முடிவு செய்கிறது என்றும் முதல் மூன்று சுற்றுகளில் தமிழக ஊர்திகள் பரிசீலனை செய்யப்பட்டது என்றும் அடுத்தடுத்த சுற்றுகளில் விதிகளின்படி தமிழக ஊர்திகள் இடம்பெறவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

இந்தியா6 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

உலகம்7 மணி நேரங்கள் ago

இதுதான் உலகின் ஒரே சைவ சாப்பாட்டு நகரம் – அசைவ உணவைத் தடை செய்தது ஏன்?

ஜோதிடம்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்10 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்16 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்16 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!