தமிழ்நாடு
வடலூர் வள்ளலார் தைப்பூசத் திருவிழா: கடலூர் ஆட்சியர் முக்கிய உத்தரவுய்
வடலூர் வள்ளலார் கோவிலில் தைப்பூசத் திருவிழா வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று வடலூரில் வள்ளலார் கோவிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்பதும் உள்நாட்டில் மட்டுமின்றி வெளி நாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தைப்பூச தினத்தன்று ஏழு திரைகள் நீக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்றும் ஒவ்வொரு திரைகள் நீக்கப்படும்போதும் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. காலை 6 மணி, காலை 10 மணி, மதியம் ஒரு மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி மற்றும் அடுத்த நாள் ஐந்து முப்பது மணிக்கு ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
இந்த ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜனவரி 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வடலூர் வள்ளலார் கோயிலில் ஜோதி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் ஜோதி தரிசனம் https://www.youtube.com/channel/UCEiJozGGHgOZFISkQAOB93A என்ற யூடியூப் சேனல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யும் செய்யப்படும் என்றும் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே ஜோதி தரிசனத்தைக் காணலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.