செய்திகள்
ஒருநாளில் 26 பேர் உயிரிழப்பு….தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்…
கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஒருபக்கம் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பும் பரவி வருகிறது. சில மாதங்களாக தினசரி கொரோனா பாதிப்பு 650-750 ஆக இருந்த நிலையில் திடீரென ஆயிரத்தை தாண்டியது.அதன்பின் கடந்த சில நாட்களாக இது படிப்படியாக அதிகரித்துக்கொண்டே சென்றது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,459 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 8963 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த ஒரு நாளில் 26 பேர் கொரோனா பாதிப்பில் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 36,956 பேர் இறந்துள்ளனர்.
ஒரு நாளில் 26 பேர் உயிரிழந்திருப்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.