கிரிக்கெட்
கேப்டவுன் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி: தொடரையும் வென்றது தென்னாப்பிரிக்கா!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே கேப்டவுனில் நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரில் கடந்த 11ஆம் தேதி தொடங்கிய மூன்றாவது மற்றும் இறுதி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 198 ரன்களும் எடுத்திருந்தது. முதல் இன்னிங்சில் விராத் கோலியும் இரண்டாவது இன்னிங்சில் ரிஷப் பண்ட் அபாரமாக பேட்டிங் செய்தனர்.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 210 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 212 ரன்கள் ரன்கள் வெற்றி பெற இலக்கு என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சற்று முன்னர் தென் ஆப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்ததை அடுத்து அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து 2-1 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா அணி தொடரையும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 19ஆம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.