உலகம்
ப்ப்பா என்ன மனுஷன்..மோடிக்கு நன்றி சொன்ன தேவ கவுடா.. சூப்பர் டிவிட்!
கவுகாத்தி: அசாமில் போகிபீல் பாலத்தை கட்ட உதவிய பிரதமர் மோடி, மன்மோகன் சிங் , வாஜ்பாய் ஆகியோருக்கு முன்னாள் பிரதமர் தேவ கவுடா நன்றி தெரிவித்துள்ளார். அவரின் இந்த டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.
பிரதமர் மோடி நேற்று போகிபீல் பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலத்தின் திறப்பு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.
அசாமில் திறக்கப்பட்ட போகிபீல் பாலம் ஆசியாவிலேயே நீளமான இரண்டாவது நீளமான ரயில் பாலம் ஆகும். இதுகுறித்து தற்போது முன்னாள் பிரதமர் தேவ கவுடா கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவ கவுடாதான் இந்த பாலத்தின் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது. 1997 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் எச்.டி. தேவ் கவுடா போகிபீல் பாலத்திற்கு அதற்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின் 2014 வரை 80 சதவிகித பணிகள் நடந்தது. மோடி பிரதமர் ஆன பின் 20 சதவிகித பணிகள் முடிந்து நேற்று பாலம் திறக்கப்பட்டது.