தமிழ்நாடு
தலையிலும், மார்பிலும் பாய்ந்த குண்டுகள்: தூத்துக்குடி துயர சம்பவம் குறித்து வெளியான உண்மை!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறையால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மேலும் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் பிரேதப் பரிசோதனையில் தமிழகத்தின் பல்வேறு மருத்துவமனைகளைச் சார்ந்த மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதன் அறிக்கை ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில், துப்பாக்கிச்சூட்டில் சுடப்பட்ட பலரும் தலை மற்றும் மாா்பு பகுதிகளில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலா் பின் பக்கத்தில் இருந்து கொல்லப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
உயிாிழந்த 13 பேரில் இளம் வயதைச் சோ்ந்தவரான ஸ்னோலினின் தலையின் பின்பக்கத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து வாய் வழியாக வெளியேறியிருப்பதாக தெரியவந்துள்ளது. 40 வயதான ஜான்சி என்ற பெண், கடற்கரை அருகேயுள்ள தனது வீட்டில் இருந்து சில 100 மீட்டர் தொலைவில் சுடப்பட்டுக் கிடந்தார். அவரது காதில் குண்டு பாய்ந்ததால் மரணம் அடைந்தார்.
34 வயதான மணி ராஜன் என்பவரது நெற்றியின் வழியாகப் பாய்ந்த குண்டு மூளையை ஊடுருவியதால் ஏற்பட்ட காயம் மரணத்தை ஏற்படுத்தியதாக அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மிகவும் அருகில் இருந்து சுடப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு எடப்பாடி அரசால் திட்டமிடப்பட்ட படுகொலை என்பதை பிரேத பரிசோதனை ஆய்வு தெரிவிக்கிறது. பெரும்பாலானவர்கள் மார்பிலும்,தலையிலும் பின்னிலிருந்து சுடப்பட்டிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்காக மக்களை கொல்லும் இந்த அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கூறியுள்ளார்.