தமிழ்நாடு
புதுக்கோட்டையில் குண்டு காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு!
புதுக்கோட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சி.ஐ.எஸ்.எஃப்.வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்ட போது தவறுதலாக சிறுவனின் மீது பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுவன் தற்போது உயிரிழந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் தேதி நார்த்தமலை என்ற பகுதியில் சிஐஎஸ்எப் வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் அந்த வழியாக ஒரு சிறுவன் சென்ற போது தவறுதலாக சிறுவன் மீது துப்பாக்கி குண்டு பட்டுவிட்டது.
உடனடியாக அந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் அவரது உடல்நிலையை கடந்த இரண்டு நாட்களாக கவலைக்கிடமாக இருந்தது என்று மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியானது என்பது கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 30ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சியில் ஈடுபட்ட போது தவறுதலாக தலையில் குண்டு பாய்ந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது.