இந்தியா
ஒரு குவார்ட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்.. குஷியில் குடிமகன்கள்….
தீபாவளி, ஆடி 18, பொங்கல் என முக்கிய பண்டிகை என்றாலே டாஸ்மாக்கில் மதுபான விற்பனை களை கட்டும். அன்று ஒருநாளில் ரூ.200 கோடி, 300 கோடி வருமானம் என செய்திகள் வெளியாகும்.
புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ள நிலையில், மதுபானம் ஒன்றே கொண்டாட்டம் என்கிற நிலைக்கு மதுபான பிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இன்று டாஸ்மாக் கடையில் விற்பனை களை கட்டும்.
அதேநேரம், புதுச்சேரியில் மது அருந்த குடிமகன்கள் பலரும் ஆசைப்படுகின்றனர். ஏனெனில் அங்கு விலை குறைவு மற்றும் மதுபான விற்பனை தனியார் வசம் இருப்பதால் பல வெரைட்டிகளில் சரக்கு கிடைப்பது முக்கிய காரணம். எனவே, தமிழ்நாடு, கேரளா, பெங்களூர் ஆகிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் மது குடிக்க பலரும் அங்கு சென்று வருகின்றனர்.
நேற்று புத்தாண்டு என்பதால் பலரும் புதுச்சேரி சென்றனர். இந்நிலையில், குடிமகன்களை குஷிப்படுத்தும் வகையில் தவளக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மதுபான கடையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்றும், நாளையும் ஒரு குவாட்டர் வாங்கினால் சிக்கன்-65 இலவசம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். எனவே, இன்று காலை முதலே குடிமகன்கள் இந்த கடையில் மது வாங்கி அருந்தி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.