இந்தியா
சிறுவர்களுக்கான தடுப்பூசி முன்பதிவு தொடக்கம்: ஜனவரி 3 முதல் செலுத்தப்படும் என தகவல்!
![child vaccine3 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2022/01/child-vaccine3.jpg)
சிறுவர்களுக்கான தடுப்பூசி ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்படும் என பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக முன்பதிவு சற்றுமுன் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தப்பிக்க தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் 15 முதல் 18 வயதினருக்கான ஒமிக்ரான் தடுப்பூசி ஜனவரி 3ஆம் தேதி முதல் செலுத்தப்பட இருக்கும் நிலையில் அதற்கான முன்பதிவு இன்று தொடங்கியது. கோவின் இணையதளத்தில் ஆதார் அட்டை அல்லது பத்தாம் வகுப்பு பள்ளி அடையாள அட்டை மூலம் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி காண முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் முதல் அதாவது ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட உள்ள நிலையில் அதற்கான முன் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.