தமிழ்நாடு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை: இன்றும் நாளையும் கனமழை!
தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்பதால் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென கனமழை பெய்ததை அடுத்து சென்னை உள்பட ஒரு சில நகரங்கள் வெள்ளத்தால் மிதந்தன என்பது குறிப்பிடத்தக்கது. திடீரென தோன்றிய வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி இன்றும் நாளையும் தொடர்வதால் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்கள் பின்வருவன: திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், காரைக்கால், நாகை.
இந்த மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் காலையிலிருந்தே மிக கன மழையை எதிர்பார்க்கலாம் என்றும் எனவே மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
மேலும் கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் 40 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.