தமிழ்நாடு
தமிழகத்தில் பொங்கல் கொண்டாடுகிறார் பிரதமர் மோடி: அண்ணாமலை அறிவிப்பு
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 14ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஜனவரி 12ஆம் தேதி தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாட பிரதமர் மோடி வருகை தர உள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தெரிவித்துள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி ஜனவரியில் மதுரை வர உள்ளார் என்பதும் அதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜனவரி 12ஆம் தேதி மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என்றும் பாஜக சார்பில் கொண்டாடப்படும் பொங்கல் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதனை அடுத்து மதுரையில் பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாட தமிழக பாஜக சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் பிரதமர் மோடி அத்துடன் மதுரையில் பொங்கல் பண்டிகையையும் கொண்டாட உள்ளது மதுரை மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இம்முறை பிரதமர் தமிழகத்திற்கு வருகை தரும்போது கருப்புக்கொடி காட்டப்படாது என்றும் கோ பேக் மொடி என்ற கோஷமும் எழுப்பப்படாது என்றும் திமுக தரப்பில் கூறியுள்ளனர் என்பது குறிபிடத்தக்கது.