செய்திகள்
என்னை சந்திப்பதை தவிருங்கள்…தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்….
அரசியல் தலைவர்கள் என்றாலே அவர்களை கட்சி தொண்டர்கள் அடிக்கடி சந்திப்பார்கள். இது வழக்கமான ஒன்றுதான். அதுவும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு போன்ற சிறப்பு தினங்களில் வாழ்த்து கூறுவதற்காக அதிகம் பேர் சந்திக்க வருவார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
ஆனால், தற்போது கொரோனா மற்றும் ஓமிக்ரன் வைரஸ் ஆகியவை வேகமாக பரவி வரும் நிலையில் இந்த விவகாரம் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 1ம் தேதி தன்னை சந்திக்க வேண்டாம் என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் ‘கொரோனாவை தொடர்ந்து ஓமிக்ரான் வேகமாக பரவி வருவதால் புத்தாண்டு நாளான ஜனவரி 1ம் தேதி அன்று என்னை சந்திப்பதற்காக நேரில் வருவதை தவிர்க்கவும். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.