Connect with us

தமிழ்நாடு

நான் சாமியார் இல்லை, அருள்வாக்கும் கொடுப்பதில்லை: அருள்வாக்கு அன்னபூரணி பேட்டி!

Published

on

நான் சாமியார் இல்லை என்றும் நான் யாருக்கும் அருள்வாக்கு கொடுப்பதில்லை என்றும் என்னை சாமியார் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்றும் அருள்வாக்கு அன்னபூரணி பேட்டி கொடுத்துள்ளார்.

தனக்கும் தன்னுடைய சீடர்களுக்கும் உயிருக்கு ஆபத்து இருப்பதாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த அன்னபூரணி அதன் பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: என்னை பற்றி சிலர் தவறான தகவல்களை பரப்பி கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அதனால் காவல்துறையில் புகார் கொடுக்க வந்தேன் என்றும் கூறியுள்ளார்.

நான் போலி சாமியார் என்றும், சாமியார் என்றும் பலர் கூறிவருகின்றனர். நான் சாமியார் இல்லை என்றும், ஆன்மீக பணியை செய்ய வந்த ஒரு சாதாரண நபர் தான் என்றும், என்னுடைய வேலையும் அதுதான் என்றும் கூறினார்.

என்னிடம் பயிற்சி பெற்ற தீட்சை வாங்கியவர்களுக்கு நான் யார் என்று தெரியும் என்றும், நான் தலைமறைவாக வெளிவந்த செய்தி பொய்யானது என்றும், எனக்கு எதிராக காவல் துறையில் எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும், என்னை காவல் நிலையத்துக்கு யாரும் அழைத்து விசாரணை செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் நான் திடீரென சாமியார் ஆகி விட்டதாக ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால் நான் ஆறு வருடமாக ஆன்மிகப் பயிற்சியை கொடுத்து வருகிறேன் என்று கூறினார். ஆதிபராசக்தி என்று நான் என்னை கூறவில்லை என்றும், நான் என்றைக்குமே என்னை கடவுள் என்றும் அவதாரம் என்றும் கூறிக் கொண்டது கிடையாது என்றும், இது என்னிடம் பயிற்சி பெற்றவர்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறினார்.

மேலும் என்னுடைய கணவர் மாரடைப்பால் தான் இறந்தார் என்றும் அவரது மறைவு குறித்து தேவையில்லாத வதந்தியைப் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கடவுள் என்றால் என்ன? கடவுள் யார்? கடவுள் எங்கே இருக்கிறார்? என்னென்ன தீய சக்திகள் உள்ளன? என்பதை உணர்த்தவே நான் வந்திருக்கிறேன் என்றும் அந்த பணியை நான் தொடர்ந்து செய்வேன் என்றும் இறுதியில் சத்தியம் தான் ஜெயிக்கும் என்றும் தர்மம் நிலைநாட்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஆன்மீகம்25 நிமிடங்கள் ago

72 ஆண்டுகளுக்குப் பிறகு சனியின் கோபத்தில் சிக்கும் 5 ராசிகள்!

ஆரோக்கியம்36 நிமிடங்கள் ago

ஏலக்காய்: சுவையும், மருந்தும் கொண்ட ஒரு அற்புதமான மசாலா!

ஆன்மீகம்58 நிமிடங்கள் ago

ஆடி சிறப்பு கூழ்: புத்துணர்ச்சி தரும் ஊட்டச்சத்து நிறைந்த செய்முறை

ஜோதிடம்1 மணி நேரம் ago

சனி பெயர்ச்சி பலன் 2024: பாடாய் படுத்தும் அஷ்டமத்து சனி; கஷ்டங்கள் நீங்க சிம்பிள் பரிகாரம்!!

வேலைவாய்ப்பு1 மணி நேரம் ago

TNPSC குரூப் 2, 2A – 2300+ அரசு வேலைகள்: நாளை கடைசி நாள்!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

மழைக்காலத்தில் ஏசி பயன்படுத்துவது எப்படி?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு உருவான வரலாறு: ஒரு சுருக்கமான பார்வை

வணிகம்2 மணி நேரங்கள் ago

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! தங்கம் விலை கணிசமாக குறைந்தது! (18/07/24)

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.. துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு டெண்டர் வெளியீடு!!

இந்தியா10 மணி நேரங்கள் ago

குஜராத்தில் பரவும் சண்டிபூர் வைரஸ் தொற்று பரவல்.. 5 பேர் உயிரிழப்பு: முழு விவரம்

ஆன்மீகம்2 நாட்கள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை2 நாட்கள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

வணிகம்3 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

உலகம்2 நாட்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு7 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

பல்சுவை5 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

வணிகம்3 நாட்கள் ago

புதுமைக்கான உலக திறன் மையங்களின் மையம் தமிழ்நாடு! 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்!

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!