தமிழ்நாடு
சென்னை-மதுரை வைகை எக்ஸ்பிரஸ் வழிப்பாதையில் மாற்றம்: தென்னக ரயில்வே அறிவிப்பு!
சென்னை – மதுரை வைகை எக்ஸ்பிரஸ் உள்பட ஒருசில ரயில்களின் வழிப்பாதைகள் மாற்றப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னையிலிருந்து டிச.26-ம் தேதி முதல் 29-ம் தேதி வரையிலும் மற்றும் டிச. 31 முதல் ஜன. 10-ம் தேதி வரையிலும் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் – குருவாயூர் விரைவு ரயில் விருத்தாச்சலம் கார்ட் லயன் வழியாக இயக்கப்படுவதற்கு பதிலாக சிதம்பரம், கும்பகோணம், தஞ்சாவூர் மெயின் வழியாக இயக்கப்படும்.
பிகானீரில் இருந்து டிச.26 மற்றும் ஜன.2 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய பிகானீர் – மதுரை வாராந்திர அதிவிரைவு ரயில் மற்றும் டிச.25, ஜன. 1 8 ஆகிய நாட்களில் அஜ்மீரிலிருந்து புறப்பட வேண்டிய அஜ்மீர் – ராமேஸ்வரம் வாராந்திர அதிவிரைவு ரயில் தஞ்சாவூர், கும்பகோணம் மெயின் லைன் வழியாக இயக்கப்படும்.
மதுரையிலிருந்து டிச.30, 31 மற்றும் ஜன. 6 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை – சென்னை எழும்பூர் வைகை அதிவிரைவு ரயில் மற்றும் குருவாயூரிலிருந்து ஜன. 9 அன்று புறப்பட வேண்டிய குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் ஆகியவையும் தஞ்சாவூர், கும்பகோணம் மெயின் லைன் வழியாக இயக்கப்படும்.
மதுரையிலிருந்து டிச. 30, 31 மற்றும் ஜன. 6 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய மதுரை – சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில், தாம்பரம் – சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து டிச.30, 31 மற்றும் ஜன. 6 ஆகிய நாட்களில் புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் ஆகியவையும் சென்னை எழும்பூர் – தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.