தமிழ்நாடு
தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்கு முடக்கம்
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளை முடக்கி காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது 3 கோடி மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பதும் இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விசாரணையின்போது தங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தலைமறைவாக இருக்கும் ராஜேந்திரபாலாஜி பிடிக்க தமிழக காவல்துறை 10 தனிப்படைகளை அமைத்து உள்ளது என்பதும் அது மட்டுமின்றி அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவுட்லுக் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜியின் நகர்வுகளை தடுக்கும் வகையில் அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜேந்திரனின் பெயரில் ஆறு வங்கிகளில் கணக்குகள் இருப்பதாகவும், அந்த வங்கி கணக்குகளை காவல்துறை முடக்கி உள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.