சினிமா செய்திகள்
ஆஸ்கார் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட நயன்தாரா படம்: விக்னேஷ் சிவனின் வருத்தமான டுவிட்!
ஆஸ்கார் போட்டியில் இருந்து நயன்தாராவின் படம் வெளியேற்றப்பட்டதை அடுத்து வருத்தத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் இயக்குனர் விக்னேஷ் பதிவு செய்துள்ளார்.
நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இணைந்து உருவாக்கியிருக்கும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் ’கூழாங்கல்’. இந்த படம் ஏற்கனவே பல சர்வதேச விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது என்பதும் இதனால் இந்த படம் ஆஸ்கார் விருதை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்கார் விருதுக்கு செல்லும் படங்களின் அடுத்த பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த பட்டியலில் ’கூழாங்கல்’ படம் இடம்பெறாதது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ஆஸ்கார் விருதுகள் பட்டியலில் நமது படம் இருக்கிறதா என்பதை பார்ப்பதே ஒரு சாதனை என்றும் ’கூழாங்கல்’ படம் அந்த பட்டியலில் இடம் பெற்று இருந்தால் இதுபோன்ற படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியும் ஊக்கமும் கிடைத்திருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்கார் விருது பட்டியலில் தமிழ் திரைப்படமான ’கூழாங்கல்’ திரைப்படம் இடம்பெறாதது அனைத்து தமிழ் ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிட தக்கது.
🙁 to check if our film has come in the list itself is a big achievement,yes ! But still! The happiness & pride that we could have brought in to independent cinema makers and producers like us would have been remarkable! If we could have made it to the short list! ???? @TheAcademy https://t.co/mMICm22Hxb
— WikkiFlix (@VigneshShivN) December 21, 2021