இந்தியா
இந்தியாவில் ஜெட் வேகத்தில் பரவும் ஓமைக்ரான் – 200ஐ தொட்ட பாதிப்பு…
கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது ஓமைக்ரான் என்கிற வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வெளிநாட்டியிலிருந்து விமானத்தின் மூலம் இந்தியா வரும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வந்தாலும் எப்படியே இது இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. குஜராத், கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம் என பல மாநிலங்களிலும் ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் கூட, டெல்லியில் ஜிம்பாபேவ் சென்று திரும்பிய ஒருவருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இருவருக்கு டெல்லியில் ஓமைக்ரான் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் சமீபத்தில் கூறினார். இதுவரையில் டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான கொரோனா தொற்று பரவுவதற்கான ஆதாரம் இல்லாமல் இருந்தது.
ஆனால் இப்போது டெல்டா வகை கொரோனா தொற்றை விட ஓமிக்ரான கொரோனா தொற்று பரவுவதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. மேலும் இந்த ஓமிக்ரான் கொரோனா தொற்று ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் தொற்றை ஏற்படுத்தும். கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டு இருந்தாலும் அவர்களையும் பாதிக்கும் என டெட்ரோஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 12 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேரில் இதுவரை 28 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.